நண்பனா இல்ல என்னோட விரோதியா?
சென்னைல இருந்தப்போ கூட வேல பாத்தவன் இவன். ரொம்ப நல்லவன். ஆனாலும் குசும்பு ஜாஸ்தி. இவன்தான் ப்ளாக் எழுது போட்டோ எடுன்னு தூண்டி விட்டான். ஆனா என்னைய பத்தி வெளில என்ன சொல்லுது இந்த விஷகுழந்தைன்னு இன்னும் தெரியல.
எதோ ஒரு ஆர்வ கோளாறுல நானும் பதிவு எழுதிறேன்னு எறங்கிட்டேன்.
எத எழுதுறது என்னத்த எழுதுறதுன்னு ஒன்னும் புரியல.
ஏற்கனவே ஒரு மொக்க போட்டாச்சு. கதை எதாவது எழுதலாம்னு யோசிச்சேன்.
சரி இப்பவே கொல வெறியோட இறங்க வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்னு விட்டுட்டேன். எதாவது கலந்து கட்டி அடிக்கலாம்னு பாத்தா அதுக்கு ஒரு டைட்டில் வேற உக்காந்து யோசிக்கணும். "கலவை" அப்டின்னு அர்த்தம் வர்ற மாதிரி டைட்டில் யோசிச்சேன். சட்னி, சாம்பார், துவையல், அப்டி இப்டின்னு நெறய... ஆனாலும் ஒன்னும் நம்மள போட்டு தாக்கற மாதிரி அமையல.
அதுவும் இல்லாம, நாம ஒரு பேரு வச்சு அதே பேருல வேற யாராவது எழுதிக்கிட்டு இருந்தாங்கன்னா பேஜாரா ஆய்டும். சரி இப்போதைக்கு நம்ம பய புள்ளைக்கு பேரு வைக்க வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.
இந்த வார சீரியல்:
விஜய் டீவீல அன்பே வா தான் நான் பார்த்த முதல் சீரியல். (முடிவு சொதப்பல்)
இப்போ கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் பார்க்கிறேன். ஆரம்பத்தில் கலக்கின சீரியல் இப்போ புயல்ல சிக்குன பட்டம் மாதிரி எங்கேயோ போகுது. (சின்ன பசங்க அரசியல்வாதி கூட சண்ட போடுறத விட்டுட்டு காமெடியா இருந்தா நல்ல இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து).
இந்த வார படம்:
இங்கே Date Night படம் பார்த்தேன். வழக்கமான அவுட்டிங் போரடிக்க, மாத்தி யோசி என்று டின்னருக்காக செல்லும் கணவன் மனைவி ஒரு இரவில் சந்திக்கும் பல பிரச்சனைகளை நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம். ஒரு முறை பார்க்கலாம்.
அப்புறம் சுறாவுக்கு Waiting na.
கவிதை:
உன்னை காணும் வரை
இதயத்தின் ஒரு பகுதி இயங்குவதேயில்லை
உன்னிடம் என்ன பேசலாம் என்று தயங்கி தயங்கி
மிடறு விழுங்கி தோற்று போவேன்
உனக்கு கொடுப்பதற்காக ஆயிரம் வார்த்தைகள் இருந்தும்
கொடுக்க முடிந்தது மௌனம் மட்டுமே.
உன் கவனம் ஈர்க்க முனைகையில்
என்னை நானே பைத்தியமாய் உணர்கிறேன்.
ஆனால்...
திரும்பி போகுமுன் தலை திருப்பி
இதழ் விரிப்பாயே அதுபோதும்
மறுநாள் உன்னைக்காணும் வரை
என் இதயம் துடிப்பதற்கு.
Wednesday, April 28, 2010
Subscribe to:
Posts (Atom)