Tuesday, May 4, 2010

கலைந்த கனவும் சில கண்ணீர் துளிகளும்...(2)

-----------------------
நல்லதாய் ஒரு
வேலையில்லை
அழகாய் ஆங்கிலம்
பேசதெரியவில்லை
உட்கார வைத்து
ஊர்சுற்ற வண்டியில்லை
பெற்றவர்கள் தலையாட்ட
ஒரே ஜாதியுமில்லை
இதையெல்லாம் நீ
அன்றே சொல்லிருக்கலாம்
உனக்காக முதல்முதலாய்
50 ரூபாய்க்கு ரீசார்ஜ்
செய்த நாளன்று.

-----------------------
நீ இல்லையென்றால்
செத்துவிடுவேன் என
உன்னிடம் கதறியழுதேன்
நம்பாமல் உன்
திருமண அழைப்பிதழை
முகத்தில் வீசிச்சென்றாய்
நான் இறந்தபின்
என் இரங்கல் கூட்டத்தில்
கூறினாய் எனை
நம்புவதாக...

-----------------------
முன்பு
உன்னைப்பார்க்க வேண்டும் என்பதே
என் வேண்டுதலாய் இருந்தது.
இன்று
உன்னை பார்த்துவிடக்கூடாது என்பதே
என் வேண்டுதலாய் இருக்கிறது.

----------------------------
தாடி வைப்பது
காதல் தோல்வியின்
அடையாளம் என்றனர்.
தாடியே முளைக்காத
நானெல்லாம் என்ன செய்வது.

-- டவுசரை அடகு வைத்து காதலிப்போர் சங்கம்.