மறக்கவும் முடியவில்லை
அழிக்கவும் முடியவில்லை.
என்னதான் முயன்றாலும்
சில நினைவுகளை
புதைக்கத்தான் முடிகிறது.
எரிக்க முடிவதில்லை!...
மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்கிறேன்!
எனக்காக வாழவும்
கொடுத்திருக்கலாம் இறைவன்
உன்னை!...
சில நிமிட செல்பேசி உரையாடல்கள்
என் வலியை உனக்கு உணர்த்தவே இயலாது.
இந்த கவிதைகள் உன்னைச் சேரும் நாட்களில்
உணர்வாய் என் வலி என்னவென்று!...
பகிர்ந்துக்கொள்ளக் கூட முடியாமல்
புழுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறது
என் இதயம்.
உயிர் கொடுத்த உறவுகளுக்காக
சுமந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை!...
எனக்குப் பிடித்த வாழ்கையை
வாழவிடாத இந்த உலகத்தை
நேசிக்கத் தெரியவில்லை.
பிறர்க்கு மட்டுமே வாழ்வதற்கு
பிறப்பு எதற்கு கடவுளே!...
யாதுமாய் நின்று
பிரிந்துவிட்ட உனக்குப்பின்
யாருமேயில்லை எனக்கு இன்று!...
செத்துவிடலாம் தான்.
ஆனால் எனக்குப்பின்
நம் காதலை யார் காப்பாற்றுவது?!...
எழுதிய கவிதைகளில்
கண்ணீர் அழித்தது போக
இதோ மீதமிருக்கும் இவையும்
காணமல் போகட்டும்
உன்னைப்போல்!...