படைக்கப்பட்டவன் நான்.
எனக்காக காத்திருப்பதாற்காகவே
படைக்கப்பட்டவள் நீ.
தாமதமாய் வருவதற்கு
ஆயிரம் காரணங்களுண்டு என்னிடம்.
காத்திருப்பதற்கு என்னைத்தவிர
வேறு காரணங்களில்லை உனக்கு.
தாமதமாய் வரும் நாட்களில்
தண்டனைபெற காத்து நிற்கிறேன்.
என்னிடம் பேசவும் மறுத்து
திரும்பி நிற்கிறாய் நீ.
நான் செய்யும் சேட்டைகளை
ரசிக்கும் மனநிலையில்
நீ இல்லை என்பதை பார்வையால்
எனக்கு உணர்த்துகிறாய்
விளையாட்டாய் உன் கால்பிடிக்க
யத்தனிக்கையில் "ஏன்டா
உனக்கு வெக்கமே இல்லையா?"
என வினவுகிறாய்.
தேவதையால் ஆசிர்வதிக்கப்பட
வெட்கம் தேவையில்லை என
உன்முன் தலைகுனிந்து நிற்கிறேன்.
தலையில் செல்லமாய் கொட்டிவிட்டு
என்னோடு கைகளை பிணைத்துகொள்ளும்போது
தூரத்தில் நின்று
உன்னைப்பார்த்து கைகொட்டி
சிரித்துக்கொண்டிருக்கிறது உன் கோபம்.