நாளெல்லாம் உழைத்து
பின்னிரவில் இருப்பிடம் சேர்ந்து
பசியாற ஒன்றுமே இல்லாமல்
படுக்கையில் விழும்போது
உணர்கிறேன் அம்மா.
நான் சாப்பிட மறுத்து
நீயும் பட்டினியாய் உறங்கிய
உன் வலியை!.
------------------------------
நான் இல்லாத
நம் வீட்டின்
பண்டிகை நாட்கள்
உனக்கு,
மற்றவர்களுக்காக சமைப்பதோடு
மட்டுமே முடிந்துவிடுகிறது.
--------------------------
சற்றுமுன் நறுக்கிய
வெண்டையின் வாசத்தோடும்
வியர்வையில் கசங்கிய
புடவையோடு காட்சியளித்தாலும்
உனையன்றி இந்த உலகில்
எவளும் அழகில்லை அம்மா!...